கல்வி உதவித்தொகை, பள்ளி அங்கீகாரத்திற்கு லஞ்சம் கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ.,கூறியுள்ளதாவது:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில்பள்ளிகளுக்கு, ஆன்லைன் மூலம் மட்டுமேஅங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த இணைப்பைபெற, இடைத்தரகர்களை அணுக வேண்டாம்.
மாணவர் கல்வி உதவித்தொகை வழங்கவும்,அங்கீகாரம் வழங்கவும் யாராவது லஞ்சம்கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும்.இதுகுறித்த புகார்களை, சி.பி.எஸ்.இ., தலைவருக்கு,chmn-cbse@nic.in என்ற இ - மெயில் முகவரிக்கும்,தலைமை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு, srana.cbse@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.இவ்வாறு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment