Thursday, March 9, 2017

CBSE - 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியது.

 சி.பி.எஸ்.இ நடத்தும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியது.

நாடு முழுவதும் மொத்தம் 8.86 லட்சம் மாணவ-மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர்.
இதற்காக நாடுமுழுவதும் 16,363 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது வகுப்பு தேர்வு தொழில்நுட்ப தேர்வுடன் இன்று தொடங்குகிறது.
இந்த தேர்வை 3 ஆயிரத்து 974 மையங்களில் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதுகிறார்கள்.
12-வது வகுப்பு தேர்வை 3 ஆயிரத்து 503 மையங்களில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
12-ம் வகுப்பு தேர்வு ஆங்கில விருப்ப தேர்வுடன் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 10-வது வகுப்பு தேர்வை 40 ஆயிரத்து 300 பேர்களும், 12-வது வகுப்புதேர்வை 15 ஆயிரத்து 450 பேர்களும் எழுதுகிறார்கள்.
10-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ந் தேதியும், 12-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ந் தேதியும் முடிவடைகின்றன.
வளைகுடா நாடுகளில் 58 தேர்வு மையங்களும், மற்ற நாடுகளில் 6 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment